குழந்தைகளும், சில கிறுக்கல்களும்

14 Nov 2012


வயதளவிலும், மனதளவிலும் குழந்தையாக இருக்கும் அனைவருக்கும் என் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!


குழந்தைகள் பற்றி என்ன எழுதுவதென்று தெரியவில்லை. என்னுடைய எண்ணங்களை வார்த்தையாக மாற்ற என்னால் முடியவில்லை. இனம் புரியாத அந்த உணர்வினை வெளிப்படுத்த நினைக்கும் போது கண்ணீர் மட்டுமே வெளியீடாக வருகிறது.

அதனால் குழந்தைகள் பற்றி நான் ரசித்த பாடல் வரிகளில் சில:

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாஷை பேச
உனக்கு தெரியவில்லை

இருந்தும் நம்மக்குள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதர்கிந்த ஆராய்சி

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

ரோஜா பூ கை ரெண்டும்
காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள்
தக்க திம்மிதா ஜதி பேசும்

எந்த நேரம் ஓயாத அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை

எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படி ஒரே ரத்தினக் கால் தோரனை
தோரனை

நீ தின்ற மண் சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்


5 comments:

பால கணேஷ் said...

வலைச்சர ஆசிரியரா இருந்தப்ப இதுல ஒரு வரியை தலைப்பா வெச்சு பதிவு போட்டீங்க. இப்ப முழுப் பாடலையும் படிக்க முடிஞ்சதுல எனக்கும் மகிழ்ச்சி பாஷித். குழந்தைகள் தினத்தன்று நல்ல பாடல் படித்த சந்தோஷததோட உங்களுக்கு என் குழந்தைகள் தின வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அருமையான பாடல்... இனிமையான பாடல்...

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்... நன்றி...

JR Benedict II said...

அட இன்னைக்கு எங்களோட தினமா? சொல்லவே இல்ல?

”தளிர் சுரேஷ்” said...

அருமை! எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது! பகிர்வுக்கு நன்றி!

perumal karur said...

நானும் மனதளவில் குழந்தை மாதிரி தாங்க சார்.....

பட் ஏழு கழுதை வயசாயிடுச்சு அது வேற விஷயம் :-)